இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நீக்கப்பட்டாலும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை,
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
101 கோவிட் மரணங்கள் தொடர்பிலான அறிவிப்பு ஒரே நாளில் வெளியாகியுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடு தொடரும் என்று வெளியாகிவரும் தகவல்கள் பொய்யானவை என்று இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டமுறையில் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் என்றும் பயணக்கட்டுப்பாட்டு நீடிப்புக் குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை